July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணியின் மொயின் அலிக்கு கொரோனா தொற்று

file photo: Facebook/ Adil Rashid95

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், அவர்களுக்கு பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொயின் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கையின் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளுக்கமைய அவர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவருடன் நெருக்கமான தொடர்புகளை பேணியவராக கிறிஸ் வோக்ஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனால், கிறிஸ் வோக்ஸும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து – இலங்கை இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 14 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தத் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த மார்ச் மாதம் இலங்கை வந்திருந்த இங்கிலாந்து அணி, கொரோனா அச்சத்தால் முழு நாடும் முடக்கப்பட்ட நிலையில், தொடர் பிற்போடப்பட்டு இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றமை நினைவுகூரத்தக்கது.