![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/unnamed-4.jpg?fit=600%2C400&ssl=1)
இலங்கையின் நீர்கொழும்பு கடற்பரப்பில் 180 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிப் படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து ஐஸ் போதைப்பொருள் 100 கிலோ கிராமும் ஹஷீஷ் போதைப்பொருள் 80 கிலோ கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 600 மில்லியன் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்படை புலனாய்வுப் பிரிவுகள், பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு மற்றும் விமானப் படையின் உதவியுடன் இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.