July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் இன்றைய தினத்தில் 403 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 401 பேர் பேலியகொடை கொரோனா கொத்தணியுடனும், 2 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 44,774 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 535 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,252 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 2 உயிரிழப்புக்கள் பதிவு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது.