May 30, 2025 19:58:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, வவுனியா வைத்தியசாலைக்கு முன்னால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியினர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, ‘கைதிகளை விடுதலைசெய், முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்காதே, காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களுக்குப் பதில் என்ன? போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் எழுப்பி, பதாதைகளையும் காட்சிப்படுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம், புதிய ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் முக்கியஸ்தர்களான நி. பிரதீபன், டொன் பொஸ்கோ, புதிய அரச பொது ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.