July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீதி ஒழுங்கைச் சட்டத்தால் கொழும்பில் வீதிகளில் கடும் வாகன நெரிசல்!

கொழும்பில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள வீதி ஒழுங்கை சட்டத்தால் பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் கொழும்பில் பேஸ்லைன் வீதி , ஹைலெவல் வீதி , காலி வீதி உள்ளிட்ட பிரதான வீதிகளில் வீதி ஒழுங்கைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் அந்தந்தந்த வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒழுங்கைகளிலேயே வாகனங்கள் பயணிக்க வேண்டும்.

இவ்வாறாக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பேலியகொட மற்றும் களனி பலங்களை அண்மித்த பகுதி , தெஹிவளை , பொரளை , நுகேகொட ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதிகளிலும் குறுக்கு வீதிகளிலும் கடும் வாகன நெரிசல் நிலவி வருகின்றது. வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, வீதி ஒழுங்கைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.