June 15, 2025 16:19:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் மண்ணரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளாவோடை பகுதிக்குச் செல்லும் பாலம் மற்றும் வீதியில் வெள்ளத்தினால் ஏற்படும் மண்ணரிப்பை தடுப்பதற்கான முயற்சிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குறித்த பாலம் மற்றும் வீதிக்கு அருகில் மண்ணரிப்பு அவதானம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த பாலம் மற்றும் வீதி உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பை தடுப்பதற்கான முயற்சிகளில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி- உமையாள்புரம் செல்லும் பாலம் மற்றும் வீதியில் மண்ணரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம், கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இராணுவத்தினரின் உதவியுடன் அப்பகுதியில் ஏற்படும் பாதிப்பினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.