July 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா எரிப்புக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

This slideshow requires JavaScript.