July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 1004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் 692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் அக்கரைப்பற்று சுகாதார பிரிவில் மாத்திரம் 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்தள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றால் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.