June 15, 2025 4:38:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் கவனயீர்ப்பு போராட்டம்

கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  மட்டக்களப்பு – வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்றது.

சிறுபான்மை மக்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தங்களது முறைப்படி புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் எனவும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மும்மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு, ஜனாஸா எரிப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி, கைகளில் வெள்ளைத்துணி கட்டி தங்களது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், சட்டத்தரணி ஹபீப் றிபான், மற்றும் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.