July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பல பிரதேசங்களுக்கு கடும் மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

இலங்கையை அண்மித்த பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களுக்கு  சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் எதிர்வரும் 24 மணித்தியாளங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

குறித்த பகுதிகளில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் இரவு வேளையில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை விழுச்சி பதிவாகும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.