![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/09/118844292_141287681004578_4971681347406316190_n.jpg?fit=515%2C338&ssl=1)
இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தான் இன்றிலிருந்து பதவி விலகுவதாக குறிப்பிட்டு, அவர் கடந்த 9ஆம் திகதி கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தின் பிரதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.