
பெருந்தோட்ட மக்கள் தொடர்பான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அனுதாப பிரேரணையை சபையில் சமர்பித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆறுமுகம் தொண்டமானின் மறைவு அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கு போன்றே தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும். அவரது உயிர் பிரிவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்புகூட என்னை சந்தித்தார்.
குறித்த சந்திப்பின்போதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடர்களை கலைவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருந்தார்.இதன்படி இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்களுக்காக அவர் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் கடமைப்பட்டுள்ளோம். என தெரிவித்துள்ளார்.