May 30, 2025 10:42:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா எரிப்புக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் கொரோனாவினால் இறப்பவர்களின் உடல்களை எரிக்கும் தீர்மானத்திற்கு எதிராக, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று வவுனியா மன்னார் பிரதான வீதி பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்று நடத்தப்பட்டது.

வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டவர்கள் ஜனஸா எரிப்புக்கு எதிரான வாசனங்கள் அடங்கிய பாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சமத் மௌலவி, வவுனியா நகரசபை உறுப்பினர்களான ரசூல் லறீப், அப்பதுல் பாரி, பாயிஸ் உள்ளிட்ட அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள், மௌலவிமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.