June 11, 2025 16:07:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் இருந்து 472 பேர் நாடு திரும்பினர்!

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து 472 பேர் இலங்கை திரும்பியுள்ளனர். விசேட விமானங்கள் மூலம் அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

450 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும், 67 பேர் கட்டாரில் இருந்தும் வந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.