June 12, 2025 11:10:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்”

தற்போதைய கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையினை கருத்திற்கொண்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இலங்கையின் சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் கைதிகள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படாதிருப்பது வேதனையானது என்று தெரிவித்தார்.

இதேவேளை தற்போது சிறைச்சாலைகளில் பரவும் கொரோனா தொற்றுக்கு தமிழ் அரசியல் கைதிகள் பலரும் உள்ளாகியுள்ள நிலையில், இந்த நிலைமையை கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பு அடிப்படையிலோ அல்லது பிணையிலோ விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.