July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து இடைநிறுத்த இ.தொ.கா தீர்மானம்

நுவரெலியா மாவட்டத்தின் அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

கொவிட் தனிமைப்படுத்தல் விதிமுறையைமீறி செயற்பட்டதாலேயே அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்த தீர்மானித்ததாக  இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதன் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறும் வகையில் அரசாங்க நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்வுகளில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் பிரதேச சபை தலைவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் தற்போது அம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.