July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை மாவட்டத்தில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின

கிழக்கில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் திருகோணமலை மாவட்டத்தில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறித்த மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக பெரியபாலம், நெய்தல் நகர், தோப்பூர், மல்லிகைத்தீவு, ஆலிம்சேனை, கிளிவெட்டி ஆகிய பிரதேசங்களில் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளன.

இந்த பிரதேசங்களில் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பகுதிகளில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் பயிர்கள் பாரியளவில் அழிவடைந்துள்ளாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தமக்கான நட்டஈட்டினை பெற்றுத் தருமாறும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இப்பகுதிகளில் உள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.