
மீள்-சுழற்சி பயன்பாட்டிற்கு உட்படுத்த முடியாத பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் ஆறு வகையான உற்பத்திப் பொருட்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் நகல் மேலதிக ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்தத் தடையை அமுல்படுத்தக்கோரி அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தத் தடை அமுல்படுத்தப்படும் பட்சத்தில் குறித்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் மூலமான பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனை ஒன்றும் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.