
இலங்கையில் கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை கட்டாய எரிப்புக்கு உட்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
கொழும்பு, பொரளை பொது மயானத்துக்கு முன்னால் இன்று இந்த அமைதி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் அனைத்து இன மக்களினதும் இறுதிக் கிரியைகளை அவரவர் மத உரிமைகளைப் பேணி, நடத்துவதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தே, இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்த 20 நாள் குழந்தை, பெற்றோரின் ஒப்புதல் இன்றி எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2 வாரங்களாக பொரளை மாயனத்துக்கு முன்னால் ‘கபன் சீலை’ கவனயீர்ப்புப் போராட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.