July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட வேண்டும்’

இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் எல்லைகளும் மூடப்பட்டு, பொது மக்கள் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு, முன்னேற்பாடுகளை செயற்படுத்தத் தவறினால், கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘தற்போது பயணக் கடுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருப்பதன் விளைவுகளை ஜனவரி மாதத்தில் கண்டுகொள்ளலாம்’ என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு களியாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க தமக்கு அதிகாரமுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.