June 13, 2025 6:55:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு

வடக்கு மாகாணத்தில் விளையாட்டை ரசிக்கும் மக்களுக்காக புதுவருடத்தில் விளையாட்டு அரங்கு ஒன்று உருவாகவுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு அருகில் அமையும் இந்த அரங்கை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளை தனியார் நிறுவனமொன்று செய்யவுள்ளது.

இந்த புதிய அரங்கு நாட்டின் கலை நுணுக்கத்தையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு அமைக்கப்படவுள்ளது. சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து ரசிக்கக் கூடியவாறு அமையவுள்ளது.

டர்ப் (Turf) விக்கெட்டுகள் மற்றும் சைட் (Site) விக்கெட்டுகள் உள்ளக வலைப் பயிற்சியரங்கு என்பனவற்றைக் கொண்டிருக்கும்.

அத்துடன் விளையாட்டு வீரர்கள், விருந்தினர்கள் மற்றும் உல்லாசப் பயணிகள் தங்கும் வகையில் ஹோட்டலொன்றையும் நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.