February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு விமானங்கள் வர நாளை முதல் தற்காலிக தடை

பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களை மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்துவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாளை அதிகாலை 2 மணி முதல் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் இலங்கைக்குள் தரையிறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரிட்டனுக்கான விமான போக்குவரத்துகளை உலகின் பல்வேறு நாடுகளும் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.