June 13, 2025 22:57:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் ஐவர் கொரோனாவுக்கு மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 163 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் மேலும் 594 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 33 ஆயிரத்த 590 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 28 ஆயிரத்து 267 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.