October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கப்பலில் மீண்டும் தீ

கப்பலில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் கப்பலில் இருந்து அதிக உஷ்னம் வௌியேறுவதால் இரசாயன பொருட்களையும் நீரையும் பயன்படுத்தி வெப்பத்தை தணிப்பதற்கான முயற்சிகள் தொடர்வதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலில் மீண்டும் அதிகளவில் தீ பரவாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கப்பல் தற்போது காணப்படும் சங்கமன்கண்டியில் இருந்து 30 கடல்மைல் தொலைவில் வீசும் பலத்த காற்று காரணமாகவும் கப்பலின் உள்பகுதியில் காணப்படும் அதிக உஷ்னம் காரணமாகவும் மீண்டும் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

எனவே இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடற்படை, இந்திய கரையோர பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருக்கு சொந்தமான கப்பல்களும் விமானங்களையும் பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.