October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

கொழும்பு 14 ஐச் சேர்ந்த 39 வயது பெண், வீரகுல பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண், கொழும்பு 15 ஐச் சேர்ந்த 77 வயது ஆண், கொழும்பு 10 ஐச் சேர்ந்த 76 வயது ஆண், கிரிவத்துட்டுவ பகுதியைச் சேர்ந்த 88 வயது பெண், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 83 வயது பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 158 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் 495 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 32 ஆயிரத்த 875 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 552 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.