July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காங்கேசன்துறை சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் சரிந்து விழுந்தது

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளது.

குறித்த பகுதியில் நேற்று நிலவிய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுரத்தின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பான அவதானிப்புக்கள் பெறப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.