
file photo
கொழும்பு – வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நசீர்வத்தை பகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.