June 13, 2025 17:04:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதான தாய், நான்கு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய் ஒருவரே, இவ்வாறு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு குப்பியாவத்தையைச் சேர்ந்த தாய், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாகவும், அவர்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.