July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு மெனிங் சந்தை வர்த்தகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் 

கொழும்பு மெனிங் சந்தை வர்த்தகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பேலியகொடவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மெனிங் சந்தைக்கான கட்டடத்தில் வியாபாரிகளுக்கு சொந்தமான கடைத் தொகுதிகளை உரிய முறையில் வழங்குமாறு கோரியே இவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பு- கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றைய தினம் முதல் இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் நேற்று பிற்பகல் வரை குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்காமையினால் அவர்கள், இன்று முதல்  சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு அதற்கு பொறுப்பான அமைச்சர் தீர்வினை வழங்காவிட்டால் நாடு முழுவதும் உள்ள பொருளாதார மையங்களை ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் 12×13 என்ற பரப்பில் வியாபாரத் தளங்களை அமைத்துத் தருவதாக தமக்கு உறுதியளித்த போதும் தற்போது 6×13 என்ற பரப்பளவிலேயே இந்த வியாபார தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.