May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் மகாகவி பாரதியாரின் பிறந்த தின நிகழ்வு

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 138 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், நல்லூர் ஆலய வீதியில் இருக்கும் பாரதியார் நினைவுச் சிலைக்கு அருகில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பாரதியார் நினைவுத் தூபிக்கு இந்திய துணைத் தூதுவர் மலர்மாலை அணிவித்ததுடன், நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் பாரதியாருக்கு மலர்மாலை அணிவித்தனர்.

இதன் பின்னர் சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவப் படத்திற்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னால்ட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.