May 30, 2025 11:55:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அக்கறைப்பற்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை

File Photo

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பாலமுனையை சேர்ந்த 35 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் .

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் 21 வயது இளைஞர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினரின் காணி எல்லைப்பிரச்சினை தொடர்பில், சமாதானம் செய்ய சென்றபோதே பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.