June 14, 2025 12:32:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு திரும்புவர்களின் தனிமைப்படுத்தல் கால அளவை குறைக்க நடவடிக்கை

File Photo

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் கால அளவை 28 நாட்களில் இருந்து 14 நாட்களாக குறைக்கப்படவுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைத் தொடர்ந்து நடத்தப்படும் பீசீஆர் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர்கள் மேலும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்கள் அல்லது ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அனுப்பப்படுகிறார்கள்

அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் பீசீஆர் சோதனைகளில் தொற்று உறுதியாகாவிட்டால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். தொற்று உறுதியானால் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள் .

அத்துடன், தொற்று உறுதியாகாதவர்களை இனி தமது வீடுகளில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவேண்டிய அவசியமில்லை என்று இராணுவத் தளபதி கூறியுள்ளார்.