July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்ல செய்தி வருமென எதிர்பார்க்கின்றோம்”

Photo: Facebook/ R. Sampanthan

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்ல செய்தி ஒன்று வரும் என தாம் எதிர்பார்த்து காத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக விரைவில் நடவடிக்கையெடுக்குமாறு கோரி, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.

”பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்களைத்தான் நாம் ‘தமிழ் அரசியல் கைதிகள்’ என்கின்றோம். அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம்” என்று கூட்டமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்களின் விடுதலை தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்தநிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் நல்ல செய்தி வரும் என்று நாம் காத்திருக்கின்றோம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.