July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு

மன்னார் மாவட்டத்தின் நடுக்குடா பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில், 141 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் ‘தம்பபவனி’ காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  இந்த ‘தம்பபவனி’ காற்றாலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் முதல் நடவடிக்கையாக, இவ்வாரம் முதல் 100 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.

மேலும், இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக ஒரு அலகு மின்சாரத்தை 8 ரூபாய் என்ற குறைந்த செலவில் உற்பத்தி செய்துக்கொள்ள முடியும் என திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு அதிகாரி வேலு சந்ரேஸ்கரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கே.திலீபன், வட மாகாண ஆளுனர் பி.எச்.எம்.சார்ள்ஸ், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.