October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

சரியாக எப்பகுதி என இனங்காணப்படாத கொழும்பு பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்,இலங்கையில் மேலும் 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24, 378 ஆக அதிகரித்துள்ளது.