October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மழை நீர் வடிந்தோடுவது தடைப்பட்டுள்ளதால், கந்தளாயில் வெள்ள அபாயம்’

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக வீதிகளில் வெள்ள நீர் நிறைந்துள்ளதுடன், தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

நேற்று இரவு பெய்த கடும் மழையினால் கந்தளாய் பேராறு வீதியில் சுமார் இரண்டு அடிக்கு மேல் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும், குறித்த பகுதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பகுதியில் இலேசான காற்றுடன் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் மழை நீர் வடிந்தோடுவது தடைப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலை நீடித்தால், குறித்த பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும், மக்கள் நலன் கருதி தேங்கி நிற்கும் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.