October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் புரவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவு பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் அங்கு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபருடன் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் எவ்.சி.சத்தியசோதி மற்றும் நெடுந்தீவு பிரதேச உத்தியோகத்தர்களும் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை அந்தப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களது பிரச்சினைகள், நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும்  மக்களது போக்குவரத்து பிரச்சினைகள், துறைமுகத்தை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் கடலரிப்பு பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.