October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புரவி சூறாவளியால் யாழ். மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

புரவி சூறாவளியால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15,459 குடும்பங்களைச் சேர்ந்த 51,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவேளை  53 வீடுகள் முழுமையாகவும் 2008 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக  சாவகச்சேரி, கோப்பாய், வேலணை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய், மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளவர்களே அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 976 குடும்பங்களைச் சேர்ந்த 3,540 பேர் 36 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.