July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு!

புரவி புயல் காரணமாக யாழப்பாணம், பொன்னாலை கடலில் காணாமல் போன மீனவர், காரைநகர் ஊரி கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுழிபுரம், பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (37) என்ற மீனவரது சடலமே நேற்று  இரவு 8.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக  பொன்னாலை கடலில் தொழிலுக்குச் சென்றிருந்த நிலையில் இந்த மீனவர் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில், கடற்றொழிலுக்கு சென்ற ஊரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் சடலம் மிதப்பதை அவதானித்து கிராம சேவையாளரான எஸ்.மயூரன் என்பவருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

அதனையடுத்து, சுழிபுரத்தில் உள்ள மீனவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், உறவினர்களும் மீனவர்களும் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மரண விசாரணைகளை அடுத்து, சடலம், யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.