June 14, 2025 15:19:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய மஹர சிறைக்கைதி மீண்டும் கைது

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைதி நேற்று இரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இவ்வாறு தப்பியோடியவர் ஒருகொடவத்தை பகுதியில் வைத்து இன்று அதிகாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மஹர சிறைச்சாலை கலவரத்தின்போது, காயமடைந்த 14 கைதிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த கலவர சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்துள்ளதோடு, 117 கைதிகளும் 2 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில், மற்றுமொரு தரப்பினர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது, கடந்த 29 ஆம் திகதி மாலை மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.