June 14, 2025 20:49:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹர சிறைச்சாலை வன்முறையில் உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா

மஹர சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறையின் போது கொல்லப்பட்ட  9 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்த ஏனைய இரண்டு கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் கடந்த 29ஆம் திகதி ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, இடம்பெற்ற மோதலில் 11 கைதிகள் உயிரிழந்தனர்.

இதன்போது, மேலும் 109 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.