October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனாவுக்கு பலி

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 02 ஐ சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், கொதடுவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும், மொரடுவை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் அகுரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும்,இலங்கையில் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 496 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.