October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அம்பாறையில் கார்த்திகை தீபத் திருநாள் அனுஷ்டிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளிலுமுள்ள இந்துக்கள் இன்றைய தினம் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.

கார்த்திகை தீபத் திருநாளை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் அனுஷ்டித்து வருகின்றனர்.

அந்தவகையில் காரைதீவு, சம்மாந்துறை, பெரியநீலாவணை, கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

மேலும் வீரமுனை, நாவிதன்வெளி, அன்னமலை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று, திருக்கோவில், கோளாவில், ஆலையடிவேம்பு, பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் குமாராலய தீபம் நடைபெற்றது.

அத்தோடு ஆலயங்களில் சொர்க்கப்பானை எரித்து கார்த்திகைத் தீபத் திருநாள் சிறப்பாக இடம்பெற்றது.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் வீடுகளிலும், கோவில்களிலும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.