October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக முதலீடுகளை செய்ய இந்தியா தயார்”

இலங்கை வந்துள்ள இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் டோவால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இருதரப்பு ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்து சமுத்திர வலயத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னோக்கிக் கொண்டு செல்லல் மற்றும் இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதி வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்துகின்ற காரணிகளைக் கண்டறிந்து, அவற்றில் முதலீடுகளை செய்வதற்கு, இந்திய அரசு தயார் அஜித் டோவால் இதன்போது தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையில் தற்போது காணப்படுகின்ற இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.