June 14, 2025 15:30:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

35 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்றார் சந்தன விக்ரமரத்ன

இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக சந்தன விக்ரமரத்ன, பொலிஸ் தலைமையகத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

கடந்த 19 மாதங்களாக பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சந்தன விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அண்மையில் அனுமதி வழங்கியது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், அப்போது பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து பூஜித் ஜயசுந்தர கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெற்றார்.

இதனால் வெற்றிடமாக இருந்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  பரிந்துரைத்திருந்ததார்.

இதற்கமைய அதற்கு நாடாளுமன்ற பேரவை அனுமதி வழங்கிய நிலையில் அவர் இன்று பொலிஸ் மா அதிபராக கடமைகளை ஆரம்பித்தார்.