October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பான் தொழிலதிபரின் மகளுடன் தலைமறைவாகியிருந்த இலங்கை இளைஞன் கைது

ஜப்பான் நாட்டு சிறுமியுடன் சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் தலைமறைவான  இலங்கை இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நீர்கொழும்பு- கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இளைஞனை சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 ஆண்டுகளுக்கு முன்பு மேலதிக கல்விக்காக ஜப்பானிற்கு சென்ற குறித்த இளைஞன், அங்குள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பகுதி நேர வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த மார்ச் 13 ஆம் திகதி அவ்வீட்டில் இருந்த 15 வயது சிறுமியை பெற்றோருக்குத் தெரியாமல் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தாய் 2020 மார்ச் 15 ஆம் திகதி கொச்சிக்கடை பொலிஸ் நிலையம் மற்றும் ஜப்பானிய தூதரகத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்த, குறித்த இருவரையும் பொலிஸ் பிரிவு தீவிரமாக தேடிவந்தது.

இந்நிலையில், 24 வயதான இளைஞனும், ஜப்பான் சிறுமியும் இளைஞனின் உறவினரது வீட்டில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.