May 31, 2025 18:07:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச பஸ்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் இழப்பீடு

Photo: Facebook/ Sri Lanka Transport Board

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிக்கும் போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

அதற்காக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்காக கொவிட் 19 பாதுகாப்பு நிதியம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பயணிகளிடம் அறவிடப்படும் பயணக் கட்டணத்தில் ஒரு ரூபாவினை குறித்த நிதிக்காக ஒதுக்கவுள்ளதாக கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.