June 14, 2025 1:05:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

யாழ்ப்பாணம் மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பரிதாபகரமான சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) மற்றும் சார்வின் (வயது -5) ஆகிய சிறுவர்கள் இருவருமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களது சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.