![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/92731073_106901004315380_5296501167746973696_o-e1605957230337.jpg?fit=1024%2C744&ssl=1)
பாம்பு தீண்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆபத்தான கட்டத்தைக் கடந்து, சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்ன.
நேற்றிரவு வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீடு செல்வதற்காக அலுவலகத்தின் கதவை மூடும்போது, அதிலிருந்த பாம்பொன்று கையில் தீண்டியதாகத் தெரியவருகின்றது.
ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிவாஜிலிங்கம், தற்போது சாதாரண நிலைக்கு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, அவரைத் தீண்டிய பாம்பை போத்தலொன்றில் அடைத்து, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போதிலும், அது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.