
மன்னாரில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யவுள்ளதாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டின் ஊடாக தடையை நீக்கி, 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் நடத்தப்பட இருந்த நிலையில், மன்னார் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்துள்ளது.
விடுதலை இலட்சியத்திற்காக உயிரிழந்தவர்களின் கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்குக்கூட இந்த அரசு தடை விதிக்கின்றமை, ஒரு மோசமான நடவடிக்கையாகும் என்றும் சிவகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவீரர் தினத்துடன் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு எல்லாம் தடை உத்தரவு பெற்று, பொலிஸார் நீதிமன்றத்தைத் தவறான முறையில் உபயோகின்றமைக்கு எதிராக அவர் தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதன் காரணமாக, இந்த நீதிமன்றத் தடைக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.